ADDED : செப் 07, 2011 10:52 PM
கிள்ளை:சிதம்பரம் அருகே மடுவங்கரை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ராமசாமி தலைமை தாங்கினார்.
ஊராட்சித் தலைவர் சண்முகசுந்தரி திருஞானம், துணைத் தலைவர்
முத்துக்குமாரசாமி, கவுன்சிலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
பின்னத்தூர் மருத்துவமனை டாக்டர் பூங்குழலி, நக்கரவந்தன்குடி கால்நடை
ஆய்வாளர் மாசிலாமணி, செயற்கை கருவூட்டல் பயிற்சியாளர் சக்திவேல், உதவியாளர்
வைத்தியநாதன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி
போட்டனர்.