/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/துணியால் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை குடிபோதையில் விளையாட்டு வினையானதுதுணியால் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை குடிபோதையில் விளையாட்டு வினையானது
துணியால் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை குடிபோதையில் விளையாட்டு வினையானது
துணியால் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை குடிபோதையில் விளையாட்டு வினையானது
துணியால் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை குடிபோதையில் விளையாட்டு வினையானது
ADDED : ஜூலை 13, 2011 01:28 AM
வில்லியனூர் : குடிபோதையில் நண்பனின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை
செய்தவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா
அடுத்த சோலாப்பூரைச் சேர்ந்தவர் சோம்நாத்முகர்ஜி, 24. இவர் பத்துக்கண்ணு கே.எஸ்
நகரில் நண்பர்களுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் தினகூலி வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடித்துவிட்டு நண்பர்கள் மூன்று பேருடன் வீட்டிற்கு வந்து
சாராயம் குடித்துள் ளார். குடி போதையில் நண்பர்களுடன் விளை யாடியபோது
சோம்நாத்முகர்ஜி கழுத்தில் துணி இறுக்கியதால், அவர் இறந்தார். இதுகுறித்து
வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த
இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் இறந்து கிடந்த சோம்நாத்முகர்ஜி உடலை மீட்டு
அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து கொலையில் தொடர்புடைய
நண்பர்கள் மூன்று பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.