ADDED : ஜூலை 11, 2011 09:26 PM
உடுமலை : உடுமலை நகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பின்றி
உள்ளது.உடுமலை நகராட்சி வளாகத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சத்து
35 ஆயிரம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.
இதில், தென்னை உள்ளிட்ட
மரக்கன்றுகள் நடப்பட்டன. பூங்கா அமைக்கப்பட்ட சில ஆண்டுகளே ஆன நிலையில்,
பூங்கா பரிதாப கோலத்தில் காட்சியளிக்கிறது. தொடர் பராமரிப்பில்லாததால்,
பூங்கா முழுவதும் விஷச் செடிகள் மட்டுமே அதிகளவு வளர்ந்துள்ளன.நகராட்சி
நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.