Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டிராக்டர்களில் மணல் சப்ளை:லாரி "ஸ்டிரைக்' எதிரொலி

டிராக்டர்களில் மணல் சப்ளை:லாரி "ஸ்டிரைக்' எதிரொலி

டிராக்டர்களில் மணல் சப்ளை:லாரி "ஸ்டிரைக்' எதிரொலி

டிராக்டர்களில் மணல் சப்ளை:லாரி "ஸ்டிரைக்' எதிரொலி

ADDED : ஆக 20, 2011 05:34 AM


Google News
ராமநாதபுரம்:லாரி 'ஸ்டிரைக்' எதிரொலியாக, தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க டிராக்டர்

களில் மணல் சப்ளை செய்யப்படுகிறது. டோல்கேட் சுங்கவரி அதிகரிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆக.,18 நள்ளிரவு முதல், லாரி 'ஸ்டிரைக்' நடந்து வருகிறது. இதில் மணல் லாரிகளும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கட்டுமானப் பணியில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இதை தவிர்க்க டிராக்டர், மாட்டுவண்டிகளில் மணல் கொண்டு செல்ல முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டாறு, உரப்புளி ஆகிய இடங்களில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 100 முதல் 120 லாரிகள் வந்த, குண்டாறு பகுதியில் லாரி ஸ்டிரைக்கினால் குறைவான லாரிகளே வருகின்றன. இதனால் டிராக்டர்கள் மணல் சப்ளை செய்வதில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன. டிராக்டரில் ஒரு யூனிட் மட்டுமே மணல் ஏற்றப்படுகிறது. குவாரியில் 316 ரூபாய்க்கு வாங்கப்படும் மணல், வெளியில் 2,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us