சுதந்திர தின ஒத்திகை; போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தின ஒத்திகை; போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தின ஒத்திகை; போக்குவரத்து மாற்றம்

சென்னை : சென்னை கோட்டையில் நடைபெறும், சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிக்காக, வாகன போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை போக்குவரத்து போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேப்பியர் பாலத்திலிருந்து, போர் நினைவுச் சின்னம் வரையிலும், போர் நினைவுச் சின்னத்திலிருந்து, இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் சாலையிலிருந்து, ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் அனைத்து வாகனங்களும், சுவாமி சிவானந்தா சாலை வழியாக, அண்ணா சாலை, முத்துசாமி பாலம் வழியாக பாரிமுனைக்கு திருப்பி விடப்படுகிறது. அதேபோல், பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக, காமராஜர் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை வழியாக வந்து, அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலை வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


