கர்நாடகாவின் அடுத்த லோக்ஆயுக்தா நீதிபதி யார்?
கர்நாடகாவின் அடுத்த லோக்ஆயுக்தா நீதிபதி யார்?
கர்நாடகாவின் அடுத்த லோக்ஆயுக்தா நீதிபதி யார்?
UPDATED : செப் 21, 2011 11:42 AM
ADDED : செப் 21, 2011 09:49 AM
பெங்களூரு: 47 நாட்கள் கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதியாக இருந்த சிவராஜ் பாட்டீல், விதிமுறைகளை மீறி வீட்டுமனைகளை பெற்றதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து, நேற்று முன்தினம் அவர், தன் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் சதானந்த கவுடா , கவர்னர் பரத்வாஜை சந்தி்த்து ஆலோசனை நடத்தினார்.புதிய நீதிபதியாக யார் நியமிப்பது குறித்து விவாதித்தார். எனினும் நீதிபதி ஷோதி என்பவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.