ADDED : ஜூலை 13, 2011 01:58 AM
உடுமலை : உடுமலை குட்டை திடல் பகுதியிலுள்ள நான்கு வீடுகளில் நேற்று
முன்தினம் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
ரசூல் சந்தை சேர்ந்த ஷேக்
முகமது(60) என்பவரது வீட்டின் பின்பக்கமாக வந்த திருடர்கள் 2 சவரன் நகைகளை
திருடி சென்றனர். அருகிலுள்ள திரு.வி.க., தெருவை சேர்ந்த அப்துல்
ரஷீத்(47) வீட்டில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை வீட்டின் பின்பக்க
கதவை உடைத்து திருடி சென்றுள்ளனர். அடுத்ததாக தங்கவேல் வீட்டில் 4
ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணமும், ஜின்னாசந்து மருதமுத்துகுமார்(45),
மற்றும் ஆறுமுகம் வீட்டில் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப்பட்டுள்ளது.