ADDED : ஆக 14, 2011 02:40 AM
விருதுநகர் : விருதுநகரில் காமராஜர் நல சங்க சுமை தூக்கும் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, நேற்று கடையடைப்பு, உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
விருதுநகர் காமராஜர் நல சங்க சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிலர், இரண்டு தினங்களுக்கு முன் லோடு இறக்க சென்றனர்.
அங்கு வந்த கைவண்டி, மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் சிலர் ,இவர்களை தாக்கினர். இதை கண்டித்து விருதுநகர் தொழிற்சங்கத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நேற்று கடையடைப்பு நடத்தியதோடு, உண்ணாவிரதமும் நடத்தியது. ஏராளமானோர் கலந்துகொண்டனர்.