ADDED : ஆக 29, 2011 11:52 PM
ஓசூர் : ஓசூர் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் அடுத்த பேரிகை ஏ.செட்டிப்பள்ளியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. பேரிகை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சூதாடியவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஏ.செட்டிப்பள்ளியை சேர்ந்த ஆதி மூர்த்தி (50), ஜெயகாந்த் (32), நேரிகத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் (30), புக்காசாகரத்தை சேர்ந்த நாகராஜ் (45) என்பது தெரிந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து, பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.