கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அவசியம்: ஜெ.,
கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அவசியம்: ஜெ.,
கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அவசியம்: ஜெ.,
ADDED : ஆக 19, 2011 04:00 AM

சென்னை : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: கடந்த 2001-06ல் அ.தி.மு.க., அரசு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த தனியாக அரசாணை பிறப்பித்தது.
அதில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டட வரைபடத்துடன், மழைநீர் சேகரிப்பு வசதியை வரைந்திருந்தால் தான், கட்டட அனுமதி வழங்கப்படுமென அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2006ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., இந்த திட்டத்தை கைவிட்டது. இனி யார் எந்த இடத்தில் கட்டடம் கட்ட விரும்பினாலும், கட்டட வரைபடத்தில், மழைநீர் சேகரிப்பு ஏற்பாட்டை செய்தால் தான் அனுமதி அளிக்கப்படும். இதற்கான அரசாணை மீண்டும் பிறப்பிக்கப்படும், என்றார்.


