/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம்ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம்
ADDED : ஆக 07, 2011 01:43 AM
கடலூர் : துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று தெப்பல் உற்சவம் நடக்கிறது.கடலூர், துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 28ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 9ம் நாள் விழாவான செடல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.முதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு ரத உற்சவம் நடந்தது.நேற்று (6ம் தேதி) இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (7ம் தேதி) இரவு 7 மணிக்கு தெப்பல் உற்சவமும், நாளை (8ம் தேதி) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவமும் நடக்கிறது.