தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்
ADDED : ஜூலை 04, 2025 10:29 PM

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி
தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் - சம்பத்
நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர்- மகேஸ்வரி
தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் - ஜான் லூயிஸ்
பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ்
புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் - மோகன்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர்- சிவராசு
தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் - ராஜேந்திர ரத்னு( கூடுதல் பொறுப்பு)
தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநர்- கேத்தரின் சரண்யா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.