Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

PUBLISHED ON : ஜூலை 27, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

'தனித்துவம் மிக்க கலை கூத்து!'



கூத்துக் கலையை வளர்க்கும் பணியில், 25 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள ஹேனி டிப்ருவின்: என் சொந்த நாடு நெதர்லாந்து.

கலாசாரம் தொடர்பான ஆய்வுக்கு இந்தியாவிற்கு வந்தபோது தான், கூத்து அறிமுகமானது. இயல், இசை, நாடகம் என முத்தமிழும் தொடர்புடைய கலை, கூத்து.இந்தக் கலைஞர்கள் வெறும் நடிப்புடன், தங்களை முடக்கிக் கொள்ளாமல், அத்தனை பணிகளையும் செய்யும் திறமை பெற்றவர்கள். தனித்துவம் மிக்க கலையை, மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியில், தீவிரமாக இயங்கினேன். கூத்துக் கலையில் ஆர்வம் உள்ளவரை திருமணம் செய்து, இங்கேயே செட்டிலாகிவிட்டேன்.



கூத்துக் கலைஞர்களை ஒருங்கிணைப்பதற்காக, 1990ல், 'கட்டைக் கூத்து சங்கம்' உருவானது. கலைஞர்களை பொருளாதார ரீதியாக உயர்த்தி, அதன் மூலம் கலையை வளர்ப்பதே இதன் நோக்கம். 200க்கும் மேற்பட்டவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். மகாபாரதம், ராமாயணம் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நவீன நாடகங்களையும் அரங்கேற்றி வருகிறோம்.உடை, ஆபரணம் என, அனைத்தும் இங்கேயே தயாராகின்றன. கடந்த, 2002ல், முறையாக கூத்துப் பயிற்சி அளிக்க, 'குருகுலம்' என்ற பட்டறையைத் தொடங்கினேன்.



இதில், பிளஸ் 2 வரையிலான ரெகுலர் பள்ளி, இயங்கி வருகிறது. ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கூத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.கூத்துப் பயிற்சி முடிப்பவர்களைச் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி, தொழில் ரீதியாக நிகழ்ச்சிகளில் வாய்ப்பு அளிக்கிறோம். பல வெளிநாட்டு நிகழ்ச்சிகள் இருந்தாலும், ஆடி மாதம் மட்டும், தமிழகக் கோவில்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us