நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மக்களுக்கு உரை
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மக்களுக்கு உரை
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மக்களுக்கு உரை

முன்னதாக கொடியேற்ற வந்த பிரதமரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி மற்றும் பல்லம்ராஜ் வரவேற்றனர். ராணுவ முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார்.
சென்னை கோட்டையில் ஜெ., கொடியேற்றினார்: செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின கொடியேற்றி பேசுகையில்: நாட்டினச சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகச்செம்மல்கள் நிறைந்து விளங்கியது தமிழகம். விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட தியாகிகளை நினைவுகூர்ந்திடுவோம். அனைத்து தரப்பு மக்களும் அச்சமின்றி வாழ்வது உண்மையான சுதந்திரம். இதற்கென எனது தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்த அடிமை விலங்கு தகர்த்தெறியப்பட்டுள்ளது.
போலீசார் அஞ்சிய நிலை மாறியது : தமிழகத்தில் கடந்த ஆட்சியில் தமிழகம் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து கிடந்ததை நான் பொறுப்பேற்ற பின்னர் சீர்படுத்தியிருக்கிறேன். சமூக விரோதிகளை கண்டு போலீசார் அஞ்சிய காலம் மாறி காவலர்களை கண்டு சமூக விரோதிகள் அஞ்சும் அளவிற்கு மாற்றியிருக்கிறேன். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழந்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறேன். போலீசாரின் பணியில் அரசின் குறுக்கீடு இல்லாமல் இருப்பதால் போலீசார் சுதந்திரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது போல மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக மகளிர் முதியோர், நெசவாளர்நலன் பெரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பெண்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில், இலவச கிரைண்டர், மிக்சி வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்டமும், வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருதுகளும் ஜெ,. வழங்கினார்.