கூடலூர் : கூடலூர் தாசில்தார் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டக் குழு நிர்வாகி ராமேஷ்வரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; யானை தாக்கி சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோஷங்கள் எழுப்பினர்.