Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

ADDED : அக் 14, 2011 11:49 AM


Google News

ஆத்தூர்: சென்னை தூத்துக்குடி இடையே நிலத்திற்கு அடியில் ‌பைப் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணி நடைபெற உள்ளது.

மதுரை, திருவண்ணாமலை, சென்‌னை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த திட்டம் சுமார் 640 கி.மீ., தூரம் அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்‌கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக செயற்கைக்கோள் மூலம் பைப்லைன் செல்லும் திட்டம் வகுக்கப்பட்டது.இந்த திட்டம் செயல்படுத்தும் போது, பைப்லைன் செல்லும் பகுதியில் 100 அ‌டி தூரத்திற்கு கட்டுமானப்பணிகள், போர்வெல் பணிகள் போன்றவை நடைபெற தடை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்‌ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரியாஜிஸ்டிக் இன்பர்ஸ்டிரக்சர் லிமிடட் நிறுவனம் செய்து வருகிறது.. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ராஜமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம நடத்தினார். இந்த கூட்டத்திற்கு வக்கீலுடன் வந்த 55 விவசாயிகள் அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த திட்டம் செயல்படுத்தினால் தங்கள் நிலம் பாதிக்கப்படும் எனவும் கூறி போராட்டம் நடத்தினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us