ADDED : செப் 03, 2011 12:19 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி பலியானார்.
கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் அருகே சுமார் 80 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி சுற்றி திரிந்தார். நேற்று முன்தினம் இரவு கந்திகுப்பம் அருகே அவர் சாலையோரம் நடந்து சென்ற போது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். கந்திகுப்பம் வி.ஏ.ஓ., பொன்னுரங்கம் கந்திகுப்பம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.


