ADDED : ஆக 28, 2011 12:43 AM
பொள்ளாச்சி : 'போத்தீஸ்' பெண்கள் திருவிழா, பொள்ளாச்சியில் இரு நாட்கள் நடந்தன.போத்தீஸ் நிறுவனம் சார்பில், கோலம், கவிதை, ஓவியம், மருதாணி, சமையல், மாறுவேடம், குழு நாடகம், தனி நடனம் என, பெண்களுக்கான 15 போட்டிகள், பொள்ளாச்சியில் இரு நாட்களாக நடந்தன; திரளான பெண்கள் பங்கேற்றனர்.
தவிர, சென்னை ராக் அகாடமி குழுவின் நடனம், நகைச்சுவை, திரைப்பட பின்னணி பாடகர் பெபின் நிகழ்ச்சி நடந்தன. சின்னத்திரை நடிகை அர்ச்சனா தொகுத்து வழங்கிய 'பேஷன் ÷ஷா' நிகழ்ச்சியில், தென்னிந்திய மாடலிங் பெண்கள், போத்தீஸின் சாமுத்திரிகா, வஸ்த்ரகலா, பரம்பரா பட்டு புடவைகளை அணிந்து பங்கேற்றனர். பட்டுப்புடவை விலையை சரியாக கூறியவர்களுக்கு, அந்த புடவையை பரிசாக வழங்கப்பட்டது. பம்பர் பரிசாக, குலுக்கல் முறையில் 3,500 மதிப்புள்ள இரு பட்டுப்புடவைகள், மெகா பம்பர் பரிசாக, 8,000 மதிப்புள்ள பட்டுப் புடவைகள், தனிநபர் போட்டிகளில் முதல் பரிசாக 1,500, 2வது பரிசாக 1,000, 3வது பரிசாக 750, குழு போட்டிகளில் முதல் பரிசாக தலா 1,250, 2வது பரிசாக 1,000, 3வது பரிசாக 750, சிறப்பு பரிசாக 500 மதிப்புள்ள ஜவுளி கூப்பன்களை, போத்தீஸ் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான அசோக் வழங்கினார்


