பெண் வயிற்றில் இருந்து10.5 கிலோ கட்டி அகற்றம்
பெண் வயிற்றில் இருந்து10.5 கிலோ கட்டி அகற்றம்
பெண் வயிற்றில் இருந்து10.5 கிலோ கட்டி அகற்றம்
ADDED : அக் 09, 2011 02:12 AM

தூத்துக்குடி:; கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், ஆபரேஷன் மூலம் பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம், 10.5 கிலோ எடை கொண்ட, மூன்று கட்டிகள் அகற்றப்பட்டன.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பண்ணைத் தோட்டத்தெரு தொழிலாளி ராமசாமி.
இவரது மனைவி சண்முகத்தாய், 48. தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்த இவர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'சிடி ஸ்கேன்' எடுத்து பார்த்ததில், இவரது வயிற்றில் மூன்று கட்டிகள் இருப்பதும், அதனால் வலி ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று காலை டாக்டர்கள் ருக்மணி, ஸ்ரீவெங்கடேஷ் ஆகியோர், சண்முகத்தாயிற்கு ஆபரேஷன் செய்து, அவர் வயிற்றிலிருந்து மூன்று கட்டிகளை அகற்றினர். அவற்றின் மொத்த எடை, 10.5 கிலோ. சண்முகத்தாய் மேல்கிசிச்சை பெற்று வருகிறார்.பட விளக்கம்: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், பெண்ணின் வயிற்றிலிருந்து, ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்ட கட்டிகள்


