/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆசிரியர்களுக்கு ஏ.சி.பி., விரைவில் வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதிஆசிரியர்களுக்கு ஏ.சி.பி., விரைவில் வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி
ஆசிரியர்களுக்கு ஏ.சி.பி., விரைவில் வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி
ஆசிரியர்களுக்கு ஏ.சி.பி., விரைவில் வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி
ஆசிரியர்களுக்கு ஏ.சி.பி., விரைவில் வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரி: 'ஆசிரியர்களுக்கு ஏ.சி.பி., விரைவில் கொடுப் பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்' என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
கல்வித்துறை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழா வில் அவர் பேசியதாவது: மனிதனுக்கு நல்ல அடிப் படையைத் தருபவர்கள்; சமூக, பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையச் செய்பவர்கள் ஆசிரியர்கள்.
நல்லாசிரியர் விருது வழங்கும் விழா: கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழா இ.சி.ஆர்., ராஜராஜேஸ்வரி திருமண நிலையத்தில் நேற்று நடந்தது. கல்வித் துறை செயலர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு, கவர்னர் இக்பால் சிங் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். கடந்த ஆண்டு டில்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் கவுரவிக் கப்பட்டனர். தலைமைச் செயலர் சத்தியவதி வாழ்த்திப் பேசினார். கல்வித் துறை இயக்குனர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், துணை இயக்குனர்கள் மீனாட்சி, ரகுபாலன், முதன்மைக் கல்வி இயக்குனர் அனுமந்தன் உட்பட பள்ளித் துணை ஆய்வாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளித் துணை ஆய்வாளர் அமிர்த கணேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.