Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

ADDED : ஆக 25, 2011 01:59 AM


Google News

காரைக்கால் : காரைக்காலில் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவிற்கு ஆதரவு தெரிவித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து பேரணி நடத்தினர்.

ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காரைக்கால் அரசு அண்ணா கல்லூரி மாணவ மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்.

வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள், கல்லூரி வாயிலில் நின்று அன்னா ஹசாரேவிற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். பின், அங்கிருந்து பேரணியாக பாரதியார் வீதி வழியாக வந்து கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் பிராங்க்ளின் லால்டின்குமாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us