ADDED : ஆக 26, 2011 10:11 PM
புதுடில்லி : வலுவான ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக வீரப்பெண் ருக்ஷனாவும் களமிறங்கி உள்ளார்.
காஷ்மீரில் நடந்த சண்டையில், பயங்கரவாதிகளை தனி ஆளாக நின்று சுட்டுக்கொன்றதன் மூலம் ருக்ஷனாவுக்கு மத்திய அரசு சார்பில் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


