ADDED : செப் 15, 2011 10:52 PM
புதுச்சேரி:தவளக்குப்பம் நீம் கிராமத் தொழில் வளர்ச்சி சங்கம் மற்றும்
சாஸ்தா மருத்துவமனை இணைந்து இலவச சர்க்கரை நோய் மற்றும் ரத்தப் பரிசோதனை
முகாமை நடத்தின.பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நடந்த
முகாமிற்கு ஜெ.சி., தலைவர் கணேஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கோவில்
தனி அதிகாரி புரு÷ஷாத்தமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நீம்
கிராமத் தொழில் வளர்ச்சி சங்கத் தலைவர் சீத்தாராமன் தலைமையுரையாற்றினார்.
சாஸ்தா மருத்துவப் பரிசோதனை டாக்டர் அய்யனார் தலைமையில் சிகிச்சை
அளித்தனர். சங்க செயலாளர் சக்திபாலன் நன்றி கூறினார்.