ADDED : ஆக 28, 2011 09:41 PM

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் கிடையாது.
சட்டசபை துவங்கியதும், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு, அந்த துறைகளின் அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.
தொடர்ந்து வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். விவாதத்துக்கு, வணிகவரிகள் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சின்னையா, வனத்துறை அமைச்சர் பச்சைமால் ஆகியோர் பதிலளிக்கின்றனர்.