/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் : பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடுமாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் : பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடு
மாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் : பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடு
மாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் : பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடு
மாநகராட்சி கவுன்சிலர் பதவி பா.ம.க., தாராளம் : பிற சமூகத்துக்கு 50% ஒதுக்கீடு
சேலம்: சேலம் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, பா.ம.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், 50 சதவீதம் பிற சமூகத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் பிரிவில் முஸ்லீம்களுக்கு, 11வது வார்டு- சையத் ரபிக், 31வது வார்டு- தாரா பேகம், 33வது வார்டு- முகமது அலிஜின்னா, 34வது வார்டு- கலாம், 41வது வார்டு- ஜென்னத்மகபூவி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சோழிய வேளாளர் சமூகத்தில் 48வது வார்டு- தமிழரசி செல்வராஜ், 49வது வார்டு- மருதபிள்ளை, 53வது வார்டு- ரமணி பாலசந்தர் ஆகியோருக்கும், செட்டியார் சமூகத்தில், 35வது வார்டு- ரேவதி, 46வது வார்டு- பாவா பழனிசாமி, 55வது வார்டு- பிரேமா ஆகிய மூன்று பேருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கவுன்டர் சமூகத்தில், 29வது வார்டு- செல்வம், 38வது வார்டு- பாலமுருகன் என இரண்டு பேருக்கும், சவுராஷ்டிரா சமூகத்தில், 30வது வார்டு- கோபி, நாயுடு சமூகத்தில் 28வது வார்டு- கணேஷ்குமார், போயர் சமூகத்தில் 8வது வார்டு- ஈஸ்வரி, சங்கமர் சமூகத்தில் 56வது வார்டு- குமார், முதலியார் சமூகத்தில், 36வது வார்டு- காளமேகம் ஆகியோருக்கும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகாரட்சி, 21வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மாதையனுக்கு பா.ம.க., ஆதரவு தெரிவித்துள்ளது. 31 வார்டுகளில் வன்னியர் சமூகத்தினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.