Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல்-கொய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல்-கொய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல்-கொய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல்-கொய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

ADDED : ஆக 04, 2024 09:14 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாட்னா: பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல் கொய்தா பெயரில், இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பீஹாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாட்னாவில் அமைந்துள்ள முதல்வர் அலுவலகத்திற்கு அல்கொய்தா பெயரில் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் முதல்வர் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

புரளி என உறுதி!

போலீசார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். இதில், இ-மெயில் மிரட்டல், வெறும் புரளி என்று தெரியவந்தது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கும்…!

முன்னதாக, பாட்னா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க, போலீசார் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us