உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க விபரம் சேகரிப்பு
உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க விபரம் சேகரிப்பு
உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்க விபரம் சேகரிப்பு
சிவகங்கை : உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, வார்டு வாரியான விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் சேகரித்து வருகிறது.
பட்டியல் தயாரிப்பு: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. அந்தந்த மாவட்டங்களில், கடந்த சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர் பட்டியலை வைத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வாரியாக வார்டுகளின் எண்ணிக்கை விபரங்களை தயார் செய்து, மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த விபரங்களை வைத்து, மாநில தேர்தல் ஆணையம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் வார்டு வாரியாக உள்ள வாக்காளர்களின் விபரங்களை பட்டியலாக 'வெப்சைட்டில்' வெளியிட உள்ளது. இந்த 'வெப்சைட்'டை திறந்து, அந்தந்த மாவட்டங்களில் வார்டு வாரியாக வாக்காளர்களின் பட்டியலை சேகரித்து கொள்ளலாம் என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' கிராம, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகள் வாரியாக உள்ள வார்டுகள் விபரங்களை சேகரித்து, அனுப்பி வருகிறோம். இம்மாத இறுதிக்குள் இந்த விபரங்கள் சேகரிக்கப்படும். பின், மாநில தேர்தல் ஆணையம், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரித்து எங்களுக்கு வழங்கும். அந்த வாக்காளர் பட்டியல் படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்,'' என்றார்.


