Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு சிறை

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு சிறை

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு சிறை

அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு சிறை

ADDED : ஆக 11, 2011 04:08 AM


Google News
சிதம்பரம்:குடிபோதையில் பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு சிதம்பரம் கோர்ட் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி இரவு நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது.

சிதம்பரம் வண்டிகேட் அருகே குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், பஸ் மீது கல்வீசியதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. கண்டக்டர் ராமமூர்த்தி காயமடைந்தார்.பஸ் பயணிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்தவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், வல்லம்படுகை காமராஜர் நகர் கனகராஜ், 30 என தெரியவந்தது.சிதம்பரம் நகர போலீசார் கனராஜை கைது செய்து சிதம்பரம் சப் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, பஸ் கண்ணாடியை உடைத்த கனகராஜிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அரசு வழக்கறிஞர் நடனம் ஆஜரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us