Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்

UPDATED : ஜூன் 23, 2025 11:31 AMADDED : ஜூன் 23, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி: திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார்.

இம்மைதானத்தில் விடுமுறை தினங்களில் பொதுமக்களின் கூட்டம் இருக்கும். நேற்று இரவு மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரியும் போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா, 28, தன் குடும்பத்தினருடன் வ.உ.சி., பூங்காவிற்கு வந்திருந்தார்.

அப்போது, அங்கு ரவுடிகள் சிலர் சேர்ந்து, ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தனர். சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா அந்த கும்பலை சமாதானப்படுத்தி, அந்த நபரை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

அதிலிருந்த ஒருவர் ஆத்திரத்தில் அரிவாளால் முகமது ரகமத்துல்லா கையில் வெட்டினார்.இதில், படுகாயமுற்ற அவர், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். தப்பிய நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

தற்போது, 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us