/உள்ளூர் செய்திகள்/மதுரை/நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வுநீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு
நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு
நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு
நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு
ADDED : ஆக 17, 2011 02:43 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் நீர், நிலவள
திட்டத்தில் 2011-12ம் ஆண்டிற்கான செயல்விளக்க திடல்கள் அமைக்க
குறுக்கட்டான்குளம், ஆரியங்குளம், சாமநத்தம், மேலநெடுங்குளம், சோளங்குருணி
கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி
இயக்குநர் செல்வன் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: இக்கண்மாய்களுக்கு உட்பட்ட
விவசாய நிலங்களில் திருந்திய நெல் சாகுபடிக்கு, மானியத்தில் உரம்,
விதைகள், தக்கைப்பூண்டு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் நிலம் குறித்த
விபரங்களை, உதவி அலுவலர்கள் அழகேசன், பாண்டி, ரவிச்சந்திரன், ரமீளா, பேபி
ஷாலினியிடம் தெரிவிக்கலாம், என்றார்