ADDED : ஜூலை 21, 2011 12:53 AM
திருப்பூர் : மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
மாநகர தலைவர் ஹைதர் அலி தலைமை வகித்தார். செயலாளர் யூசுப் வரவேற்றார்.கூட்டத்தில், 'ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சாய ஆலைகளை இயக்க முன் வருவோருக்கு, உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; மானியத்தொகையை சாய ஆலைகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநகர துணை செயலாளர் அஸ்கர் அலி, மாவட்ட தலைவர் ஹாலிதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


