ADDED : செப் 16, 2011 01:21 AM
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டஅறிக்கை:தேனி மாவட்டத்தில்உள்ள வைகை அணையிலிருந்து, இந்த ஆண்டின்பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று, செப்., 16(இன்று) முதல், வைகைஅணையிலிருந்து தண்ணீர்திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம்மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


