Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேசிய விளையாட்டு போட்டிக்குகரூர் மாணவ, மாணவிகள் தேர்வு

தேசிய விளையாட்டு போட்டிக்குகரூர் மாணவ, மாணவிகள் தேர்வு

தேசிய விளையாட்டு போட்டிக்குகரூர் மாணவ, மாணவிகள் தேர்வு

தேசிய விளையாட்டு போட்டிக்குகரூர் மாணவ, மாணவிகள் தேர்வு

ADDED : செப் 05, 2011 01:24 AM


Google News
கரூர்: தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்குபெற கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.மாநில அளவிலான ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பள்ளிகள் இடையே நாகர்கோவிலில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.

அதில், தமிழ்நாட்டில் உள்ள 17 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியை சேர்ந்த 29 மாணவ, மாணவிகளும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்களை வென்றனர். இவர்கள் அனைவரும் ஒரிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் மணிராஜ், முதல்வர் பத்மா பிரியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us