ADDED : செப் 23, 2011 11:28 PM
ராமநாதபுரம் : பி.டி.ஓ.,க்கள் 'ரிலீஸ் ஆர்டர்' கொடுத்தால் மட்டுமே
ஊராட்சிகளுக்கான நிதியை வழங்க வேண்டும், என்று வங்கிகளுக்கு அந்தந்த
பி.டி.ஓ.,க்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறைகள்
நடைமுறைக்கு வந்துவிட்டநிலையில் ஊராட்சி தலைவர்களின் 'செக் பவர்'
நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு நிதி தேவைப்படும் பட்சத்தில்,
சம்பந்தப்பட்ட பி.டி.ஓ.,க்கள் 'ரிலீஸ் ஆர்டர்' கொடுத்தால் மட்டுமே,
ஊராட்சிகள் நிதியை பெற முடியும், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.