/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/வெளிமாநிலங்களுக்கு விவசாயிகள் "டூர்' தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏற்பாடுவெளிமாநிலங்களுக்கு விவசாயிகள் "டூர்' தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏற்பாடு
வெளிமாநிலங்களுக்கு விவசாயிகள் "டூர்' தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏற்பாடு
வெளிமாநிலங்களுக்கு விவசாயிகள் "டூர்' தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏற்பாடு
வெளிமாநிலங்களுக்கு விவசாயிகள் "டூர்' தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏற்பாடு
பெரம்பலூர்: வெளிமாநிலங்களுக்கு டூர் செல்லும் விவசாயிகளின் பஸ்சை பெரம்பலூர் டி.ஆர்.ஓ., சுப்ரமணியன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
கோவில்பட்டியிலுள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் மானாவாரி மிளகாய், மருத்துவ பயிர்கள் சாகுபடி முறை குறித்தும், குற்றாலத்திலுள்ள பழப்பண்ணை மற்றும் பூச்செடிகள், அலங்கார செடிகள் உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்படும்.கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கிழங்கு வகை ஆராய்ச்சி நிலையத்திற்கும், பீச்சியில் உள்ள கேரளா வன ஆராய்ச்சி நிலையத்திற்கும், வேலு பாடத்திலுள்ள மூங்கில் ஆராய்ச்சி யைத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். திருச்சூர் வேளாண் கல்லூரி மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம், முந்திரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் உடுமலைபேட்டையில் உள்ள ஜெயின் பண்ணையில் மா அடர்நடவு, புதிய தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்காக விவசாயிகளுடன் தோட்டக்கலை அலுவலர்கள் ஆனந்தன், துரை மற்றும் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் உடன் செல்கின்றனர். விவசாயிகளுக்கான இப்பயிற்சி சுற்றுலாவிற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் செல்லும் பஸ் பயணத்தை டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சௌந்தரராஜன், உதவி இயக்குநர் நலங்கிள்ளி, தேன்மொழி மற்றும் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.