தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் வீட்டில் சோதனை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் வீட்டில் சோதனை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் வீட்டில் சோதனை
UPDATED : அக் 14, 2011 11:25 AM
ADDED : அக் 14, 2011 08:14 AM
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்தது. மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக உள்ள டாக்டர் பன்னீர்செல்வத்தின் திருச்சி மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. அவர்கள் மீது 15ஆர்/டபிள்யு, 13(1)(d),மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 1988ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


