ADDED : செப் 06, 2011 12:59 AM
திருபுவனை: புதுச்சேரி மருத்துவர்கள் கூட்டமைப்பு நலவாழ்வு சேவை மையம் மற்றும் பாரதி கண்ணம்மா மகளிர் சுய உதவிக் குழு இணைந்து இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை நடத்தின.
திருபுவனை தொகுதி, க. ஆண்டியார்பாளையம் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமினை அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழக, பொதுச் செயலாளர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். அரசு ஆயுர்வேத மருத்துவர் ராமன், ஜாய் இமானுவேல் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் காங்., பிரசார குழு கலியவரதன், ஓட்டுனர் உரிமையாளர் சங்கத் தலைவர் லிங்கநாதன், ஆண்டியார்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்கம் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாரதி கண்ணம்மா மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்திருந்தனர்.


