ADDED : ஆக 25, 2011 11:30 PM
திருவாடானை : விவசாயிகள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
தாலுகா
செயலாளர் ராசு தலைமை வகித்தார். தாலுகா தலைவர் பூபாலன், மார்க்கிஸ்ட்
செயலாளர் சந்தானம், கட்டிவயல் ஊராட்சி தலைவர் மரியஅருள் கலந்து கொண்டனர்.
பயிர் இன்ஸ்சூரன்ஸ் பிரிமியம் செலுத்திய அனைவருக்கும் இழப்பீட்டு தொகை
வழங்கவேண்டும். தரமான விதைகளும், கலப்படம் இல்லாத உரங்களும்
தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1,500 என
விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.