ADDED : ஆக 11, 2011 11:22 PM
கோவை : பீளமேடு, நேஷனல் மாடல் பள்ளியில் ஆளுமைத் திறன் மேம்பாடு முகாம் நடந்தது.
முகாமில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, நேரத்தை பயனுள்ள வகையில் திட்டமிடவும், ஆளுமைத் திறனை மேம்படுத்தவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பள்ளிகள் இடையேயான கலை, இலக்கிய போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ராதிகா நிச்சானி பேசினார். அதிகாலை முதல் நள்ளிரவு வரை மாணவ,மாணவியர் தங்களது பணிகளை எவ்வாறு திட்டமிட்டு செயல்படுவது என்பது குறித்து முகாமில் அறிவுறுத்தப்பட்டது.