நெல்லையில் புதிய கமிஷ்னர் பதவியேற்பு
நெல்லையில் புதிய கமிஷ்னர் பதவியேற்பு
நெல்லையில் புதிய கமிஷ்னர் பதவியேற்பு
ADDED : ஆக 05, 2011 12:51 PM
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி புதிய கமிஷ்னராக அஜய் யாதவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நெல்லை மாநகராட்சி கமிஷனராக இருந்த சுப்பையன், சென்னை ஆவின் இணை நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக கோவை வணிகவரித்துறை அதிகாரியாக இருந்த அஜய் யாதவ், நெல்லை மாநகராட்சி கமிஷ்னராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 34 வயதுடைய அஜய் யாதவ், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். 1996ல் நெல்லை மாவட்டம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு கமிஷ்னராக பதவியேற்கும் 11வது கமிஷ்னர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.