Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நிலக்கடலை, வெங்காயம் பயிரிட்டால் லாபம் நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை

நிலக்கடலை, வெங்காயம் பயிரிட்டால் லாபம் நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை

நிலக்கடலை, வெங்காயம் பயிரிட்டால் லாபம் நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை

நிலக்கடலை, வெங்காயம் பயிரிட்டால் லாபம் நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுரை

ADDED : ஜூலை 29, 2011 12:34 AM


Google News

திருநெல்வேலி : நெல்லையில் விவசாயிகள் நிலக்கடலை, வெங்காயம் பயிரிட்டால் அதிக லாபம் கிடைக்கும் என வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) தியாகராஜன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தை தகவல் மையம் ஆய்வு மேற்கொண்டு நிலக்கடலை பருப்பிற்கு கிலோ ஒன்றுக்கு 44 முதல் 46 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை பயிர் செய்தால் அதிக லாபம் பெறலாம்.



விதைப்பதற்கு முன் விதைகளை கேப்டான் அல்லது திரம் பூஞ்சாணக்கொல்லியை கொண்டு ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். அடியுரமாக 80 கிலோ ஜிப்சம் இட வேண்டும். விதைத்த 45 முதல் 50 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக களை எடுத்த பின்பு 80 கிலோ இட்டு மண் அணைத்தால் திரட்சியான நிலக்கடலை பருப்பை பெறலாம். சிறிய வெங்காயத்தின் விலை கரீப் பருவத்தில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அறுவடையின் போது ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய் வரையும், நவம்பர், 2012 ஜனவரியில் ஒரு கிலோ 20 முதல் 27 ரூபாய் வரையும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கரீப் பருவத்தில் விவசாயிகள் சிறிய வெங்காயத்தை பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்'' என தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us