ADDED : ஜூலை 15, 2011 05:10 AM
மதுரை:சென்னை அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய செயலாளர் வெ.
ராஜா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மதுரை பெருமண்டல கூடுதல் தொழிலாளர் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் இவரது கட்டுப்பாட்டில் செயல்படும்.


