Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம்

கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம்

கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம்

கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம்

ADDED : ஜூலை 13, 2011 09:58 PM


Google News
உடுமலை : உடுமலையில், கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகாம் நடந்தது.

பொள்ளாச்சி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அண்ணாமலை, 'கோட்டத்தில் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டின் இலக்கை அடைய வேண்டும்; மக்களிடம் இத்திட்டத்தை முழுமையாக கொண்டு செல்ல @வண்டும்', என்றார். அஞ்சல்துறை உட்கோட்ட ஆய்வாளர் செல்வம், உடுமலை தலைமை அஞ்சலகர் பாலகிருஷ்ணன், சேமிப்பு வங்கி அஞ்சல் அலுவலர் ஜவஹர் ஆகியோர் பேசினர். முகாமில், ஒரு கோடியே 6 லட்சத்திற்குமேல் மதிப்புள்ள பாலிசிகள் கோட்ட கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத்திட்டத்தில் மக்களை சேர்க்க உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆதரவை கோருவது உட்பட பல்வேறு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில், உடுமலை உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமப்புற அஞ்சல் ஊழியர்களும் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us