சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் அனன்யா
சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் அனன்யா
சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் அனன்யா

நீர் சாகசம்
கல்லுாரியில் அனன்யா படிக்கும் போது, பாதயாத்திரை, பாறைகள் மீது ஏறுவது, நீரில் சாகசம் செய்வதில் ஆர்வத்தை வளர்த்து கொண்டார். சாகச சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். கர்நாடகாவில் இருந்தே, தன் சாகச பயணத்தை துவக்கியுள்ளார். நடப்பாண்டு ஜனவரி 25ம் தேதி, இந்திய சுற்றுலா தினத்தன்று, தனியாக பயணத்தை துவக்கினார். இதுவரை 14 மாவட்டங்களுக்கு சென்று, சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்.
சிறப்பு அனுபவம்
ரயில்கள், அரசு பஸ்களில் பயணிக்கிறேன். அரசு பஸ்களில் பயணிப்பதால், உள்ளூர் மக்களை தொடர்பு கொள்ள முடிகிறது. மாநிலத்தின் சிறப்புகள், அழகை தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எனக்கு, ஒவ்வொரு விதமான சிறப்பு அனுபவம் கிடைத்தது.
பெற்றோர்
சாகச பயணத்தில் எனக்கு பெற்றோரின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. இது என் அதிர்ஷ்டம். என் தந்தை, உணவு வினியோகிக்கும் பணி செய்கிறார். தாயார், பகுதி நேர ஊழியராக ஊர்க்காவல் படையில் பணியாற்றுகிறார். ஆயுர்வேத சிகிச்சை அளிக்கிறார். பெற்றோருக்கு நான் ஒரே மகளாக இருந்தும், சாகச சுற்றுலாவுக்கு என்னை ஊக்கப்படுத்துகின்றனர்.