ஆயுர்வேத மருத்துவரின் 'சூப்பர் புட்'
ஆயுர்வேத மருத்துவரின் 'சூப்பர் புட்'
ஆயுர்வேத மருத்துவரின் 'சூப்பர் புட்'

'மைக்ரோ கிரீன்ஸ்'
நோய்கள் வருவதற்கு மூல காரணமே சத்து குறைபாடே என்பதை அறிந்தவர், நோயாளிகளுக்கு சத்தான, 'மைக்ரோ கிரீன்ஸை' வழங்குகிறார். மைக்ரோ கிரீன்ஸ் என்பது காய்கறிகள் அல்லது மூலிகைகளின் விதை முளைத்தவுடன், முளை செடியாக வளரும்போது, அறுவடை செய்து சாப்பிடும் முறை.
மலிவு விலை
நோயாளிகள் இல்லாத நேரத்தில், முழுதுமாக பராமரிப்பு வேலைகளில் இறங்குவார். இவரிடம் வரும் நோயாளிகளில் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மைக்ரோகிரீன்ஸையும் வழங்குகிறார். இதை, மார்க்கெட் விலையை விட குறைந்த விலையிலே தருகிறார். இதுமட்டுமின்றி, அதை எந்த நேரத்தில், எப்படி செய்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக பலன் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கிறார்.
இது குறித்து டாக்டர் மீரா கூறியதாவது:
என்னிடம் வரும் பல நோயாளிகள் புற்றுநோய் பற்றி கவலைப்பட்டனர். இதற்கு ஒரு தீர்வை கண்டறிய முயற்சித்தேன். அப்போது, புற்றுநோயை தடுக்கும் வல்லமை படைத்த மைக்ரோ கிரீன்ஸை பற்றி அறிந்தேன். இதை சாப்பிடுவதன் மூலம், புற்றுநோயாளிகள் நோய் பரவலை தடுக்க முடியும்; கல்லீரலில் வரும் பிரச்னைகள் கட்டுப்படுத்தப்படும்.