/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர் பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்
பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்
பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்
பல்வேறு தொழில்களில் அசத்தும் 4 பெண் தொழில் முனைவோர்

ஜெயலட்சுமி
பெங்களூரு ரூரல் நந்தகுடி அருகே நெலவாகிலு கிராமத்தை சேர்ந்தவர். தனது கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதை கவனித்த ஜெயலட்சுமி, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுஜாதா
சிக்கபல்லாபூரின் அஜ்ஜாவாரா கிராமத்தை சேர்ந்தவர். கரிம எண்ணெய் தயாரிக்கும் தொழில் செய்கிறார். இதற்காக தாவரங்கள் விதைகள், கொட்டைகளை பயன்படுத்துகிறார். கரிம எண்ணெய் பெரும்பாலும் அழகுசாதன பொருட்கள், விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
பாக்யம்மா
பெங்களூரு ரூரல் ஜிகனி அருகே அரகெரே கிராமத்தை சேர்ந்தவர். ரசாயனம் இல்லாத பற்பசை தயாரிக்கும் தொழில் செய்கிறார். இதற்காக தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா, கற்றாழை, கிராம்பு எண்ணெய், மிளகு கீரை ஆகியவற்றை பயன்படுத்துகிறார். தான் தயாரிக்கும் பற்பசையை பெங்களூரு ரூரல் மாவட்டம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். ஐந்து பெண்களுக்கு வேலையும் அளித்து உள்ளார்.
சர்வாரி
பெங்களூரில் இருந்து கனகபுரா செல்லும் சாலையில் உள்ள சிறிய கிராமமான எலச்சினஹள்ளியை சேர்ந்தவர். பயன்படுத்த முடியாது என்று கருதி துாக்கி வீசும் பொருட்களை சேகரித்து வண்ணமயமாக்கும் தொழில் செய்கிறார். பொருட்களை அழகாக வடிவமைப்பது இவருக்கு கை வந்த கலை. குப்பை கழிவுகளையும் தரம் பிரிக்கிறார்.