கதைச் சுருக்கம்
-------------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
சிக்கன் பிரியாணி குடும்பம், குஸ்காவுக்கு மாறும் ஒரு சாதாரண கதையை இரண்டு மணி நேரத்துக்கு சுவாரஸ்யமாகச் சொன்னதற்காக அமலாபால் வீட்டுக்காரரை கைகுலுக்கிப் பாராட்டலாம்.
குலசாமிக்கு நேர்ந்து கொண்டு, பலி கொடுக்க ஒரு சேவலை வளர்க்கிறார் நாசர். அது கொல்லப்படுவதை விரும்பாத பேத்தி சாரா (தெய்வத் திருமகள்), சேவலை ஒளித்து வைக்க, அவளுக்கு ஆதரவாக வீட்டாரும் மாற, கடைசியில் அந்த சேவல் உயிர் பிழைக்கிறது.
சாரா செமை க்யூட். கண்கள் பேசுகின்றன. குழந்தைத் தனமும், புத்திசாலித்தனமும் கலந்த ஒரு கவிதை. உன்னியின் மகள் பாடும் பாடலில் ஒரு தெய்வீகம். உன் சின்னக் கை விருதின் பலத்தைத் தாங்க வேண்டும் சாரா குட்டி!
நாசர், வழக்கம்போல் வாழ்ந்திருக்கிறார்.
எப்போதும் முறைத்துக் கொண்டேயிருக்கும் அந்தத் தடிப் பொடியனும் பலே!
டீன்ஏஜ் கேர்ள் ட்வாரா ஓவியம் போல் இருக்கிறார். எல்லார் முன்னாடியும் பேச மாட்டேன் என்று கிசுகிசுக்கும் அவரும் அத்தை (பொண்ணுக்காக)யைத் தேடும் பாட்ஷாவும் பொருத்தம்.
ஜி.வி. பிரகாஷ் ஆரவாரமில்லாமல் மண் மணக்கச் செய்திருக்கிறார்.
எதற்கெடுத்தாலும் தோப்புக்கரணம் போடுவது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் கடைசியில் அதைச் செய்வது நைஸ்.
யார், யாருக்கு என்ன சொந்தம்? போன்ற உறவு குழப்பம் படம் முழுக்க நீடிப்பதும், ஒரு வீட்டுக்குள்ளேயே கதை சுற்றுவதும் குறை!
சைவம் - அவார்டு நிச்சயம்!
குமுதம் ரேட்டிங் - நன்று




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!