/பிற மாநில தமிழர்/புதுடில்லி/விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோயிலில் லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜப பாராயணம்விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோயிலில் லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜப பாராயணம்
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோயிலில் லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜப பாராயணம்
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோயிலில் லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜப பாராயணம்
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோயிலில் லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜப பாராயணம்
மே 06, 2024

புதுதில்லி : விகாஸ்புரி சி பிளாக்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜபம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, விகாஸ்புரி பிராத்தனா குழுவினர் செய்து இருந்தனர். ரிக் வேதிகள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம், கலச ஸ்தாபனம் லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ஆரத்தியுடன நிறைவுற்றது.
பிள்ளையார், அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் திருவுருவங்கள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
பிரதி மாதம் முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும், லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் இக்கோயிலில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்