Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ADDED : ஜூன் 17, 2025 02:31 PM


Google News
Latest Tamil News
ஜெருசலேம்: ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

ஈரான்- இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவர் உச்ச தலைவர் அலி கமானியின் நெருங்கிய ராணுவ ஆலோசகரும் ஆவார்.

இவர் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியாகவும், மிக மூத்த ராணுவத் தளபதியாகவும் இருந்தார்.

ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி அலி சட்மானி தளபதியாக நியமிக்கப்பட்டார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான சண்டை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெஹ்ரானை விட்டு மக்கள் வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஈரானில் உள்ள சுமார் 6000 இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us