அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் பலனளிக்காது: ரஷ்யா திட்டவட்டம்
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் பலனளிக்காது: ரஷ்யா திட்டவட்டம்
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் பலனளிக்காது: ரஷ்யா திட்டவட்டம்
ADDED : செப் 19, 2025 08:02 AM

மாஸ்கோ: இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் பலனளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக, ரஷ்ய ஊடகத்திற்கு செர்ஜி லாவ்ரோவ் அளித்த பேட்டி: சீனாவும், இந்தியாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். எனக்கு பிடிக்காததை செய்வதை நீங்கள் நிறுத்துங்கள் அல்லது நான் உங்கள் மீது வரிகளை விதிப்பேன் என்று அவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் பலனளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.
இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கைகளை எதிர்த்து வருகிறது. அமெரிக்காவின் அழுத்தத்தை விட தங்கள் சொந்த தேசிய நலன்களை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன. இந்த வரி அச்சுறுத்தல், அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல், குறைந்தபட்சம் அவர்களுக்கு மிகவும் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது.
புதிய சந்தைகள், புதிய எரிசக்தி விநியோக ஆதாரங்களைத் தேட அவர்களை கட்டாயப்படுத்துகிறது. அதிக விலைகளை செலுத்த அவர்களை கட்டாயப்படுத்துகிறது. ஆனால் இதைத் தாண்டி, ஒருவேளை இதை விட முக்கியமாக, இந்த அணுகுமுறைக்கு ஒரு தார்மீக மற்றும் அரசியல் எதிர்ப்பு உள்ளது. வெளிப்படையாகச் சொன்னால், ரஷ்யா மீது விதிக்கப்பட்ட புதிய தடைகளில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
அந்தக் காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான தடைகள் அதிபர் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் விதிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகள் இந்தத் தடைகளை விதித்தபோது ஏற்பட்ட சூழ்நிலையிலிருந்து நாங்கள் முடிவுகளை எடுக்கத் தொடங்கினோம். இவ்வாறு செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.